எள்ளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக மருந்தாகவும், சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணய் ஆசிய கலாச்சாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமையல், மருந்து மற்றும் மத சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், இந்த எண்ணெய் அதன் சிகிச்சை பண்புகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும், உடலை மசாஜ் செய்வதற்கும் சிறந்தது.
நல்லெண்ணயில் சமைப்பது என்பது தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகளும்தான். இந்த பதிவில் நல்லெண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
முடி நரைப்பதைத் தடுக்கிறது
நல்லெண்ணயைக் கொண்டு முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்வது முன்கூட்டிய நரையைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் இயற்கையான நிறத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவுகிறது.
உண்மையில், எள் எண்ணெயில் முடியை கருமையாக்கும் தன்மை உள்ளது. எள் எண்ணெயை தொடர்ந்து முடியிலும், சமையலிலும் பயன்படுத்துவது முடியை கருமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
மூட்டு வலியைக் குறைக்க உதவும்
நல்லெண்ணெயில் குறிப்பிட்ட அளவு துத்தநாகம் மற்றும் மக்னீசியம் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
எள் எண்ணெயில் உள்ள தாமிரம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்குக்கு மிகவும் புகழ்பெற்றது, மேலும் மூட்டுவலி, மூட்டுகளின் வீக்கம் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
பழங்காலத்திலிருந்தே நல்லெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்பட்டது. எள் எண்ணெயை உணவு எண்ணெயாக பயன்படுத்துவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, லிப்பிட் பெராக்சிடேஷனைக் குறைக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளில் ஆக்ஸிஜனேற்ற நிலையை அதிகரிக்கிறது.
மனஅழுத்தத்தைக் குறைக்கிறது
நல்லெண்ணயில் டைரோசின் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனின் செயல்பாட்டுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. செரோடோனின் ஒரு நரம்பியக்கடத்தியாகும், இது நமது மனநிலையை பாதிக்கிறது.
அதன் சமநிலையின்மை மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பது செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது, இது நேர்மறையாக உணரவும், நாள்பட்ட மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

வாய் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பது ஒரு பழங்கால ஆயுர்வேத முறையாகும், இது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பின்பற்றப்படுகிறது. ஒரு தேக்கரண்டி எள் எண்ணெயை வெறும் வயிற்றில் எடுத்து வாயில் 20 நிமிடம் ஊறவைத்து பிறகு துப்பவும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் என்று நம்பப்படுகிறது.
சரும ஆரோக்கியம்
நல்லெண்ணெய் ஆயுர்வேதத்தில் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் மதிப்பிடப்படுகிறது. நல்லெண்ணய் பொதுவாக சருமத்திற்கான அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர், ஆரோக்கியமான சருமத்தின் மீளுருவாக்கம், வயதான எதிர்ப்பு பண்புகள் மற்றும் இயற்கையான SPF ஆக கருதப்படுகிறது.
அதன் வெப்பமயமாதல் பண்பு மற்றும் தோலில் ஆழமாக ஊடுருவக்கூடிய திறன் காரணமாக இது மசாஜ் எண்ணெயாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது
நல்லெண்ணெய் மெக்னீசியம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இவை அனைத்தும் சேர்ந்து எள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சமையலுக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம்.
புற்றுநோயைத் தடுக்கிறது
நல்லெண்ணெயில் மெக்னீசியம் உள்ளது, இது சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பைடேட் எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு கலவையும் உள்ளது. இந்த பொருட்களின் ஒருங்கிணைந்த செயல்கள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.
